search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய தலைமை செயலகம்"

    • ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.
    • வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

    சென்னை:

    2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

    இந்த புதிய தலைமைச் செயலகத்தை கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆர்.ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை ஐகோர்ட்டு, ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் மனுத்தாக்கல் செய்தார்.

    அதில், இந்த வழக்கில் தன்னை ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் இன்று காலையில் தீர்ப்பு அளித்தனர்.

    அதில், இந்த மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்தும் படி அரசுக்கு இந்த ஐகோர்ட்டு நிர்பந்தம் செய்ய முடியாது. எனவே, மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், வழக்கை திரும்ப பெற அனுமதிக்கக் கூடாது என்று ஜெயவர்தன் மனு மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    • புதிய தலைமை செயலகம் திறப்பு விழா பிப்ரவரி மாதம் 17ம் தேதி தெலுங்கானாவில் நடைபெறுகிறது.
    • பிப்ரவரி மாதம் 17ம் தேதி செகந்திரபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்கிறார்.

    தெலுங்கானாவில் புதிதாக மாநில தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பிப்ரவரி மாதம் 17ம் தேதி தெலுங்கானாவில் நடைபெறுகிறது.

    புதிய தலைமை செயலக திறப்பு விழாவில் கலந்துக் கொள்ளுமாறு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதைதொடர்ந்து, பிப்ரவரி மாதம் 17ம் தேதி செகந்திரபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அதனை விசாரிக்க அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை கலைக்க சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #RagupathiCommission
    சென்னை:

    திமுக ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த 2012-ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

    இந்த ஆணையத்தை எதிர்த்தும், ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், 2015-ம் ஆண்டு ரகுபதி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. 

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, 3 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த ஆணையத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு, இதுவரை எவ்வளவு  ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார். 

    மீண்டும் இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டதற்கான செலவுகளை அரசு தாக்கல் செய்தது. 

    ரகுபதி ஆணையத்துக்கு இதுவரை 4 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐகோர்ட் தடை விதித்திருந்த மூன்றாண்டு காலத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கபட்டிருந்தது.

    அப்போது இது வீண் செலவு இல்லையா என கேள்வி எழுப்பினார். ஆணையத்தின் செயல்படுகளை அரசு கண்காணித்து இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதி, வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    இன்று வழக்கு விசாரணையில், ரகுபதி ஆணையத்தை கலைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதுவரை ரகுபதி ஆணையம் ஆய்வு செய்துள்ள ஆவணங்களை வைத்து கைது நடவடிக்கை உள்ளிட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆணையத்துக்கு அளிக்கப்பட்டு வந்த வசதிகளை நிறுத்தவும் நீதிபதி ஆணை பிறப்பித்தார். 
    ×